sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குளக்கரையில் பொக்லைனில் நடக்கும் சீரமைப்பு பணி; விவசாயிகள் அதிருப்தி

/

குளக்கரையில் பொக்லைனில் நடக்கும் சீரமைப்பு பணி; விவசாயிகள் அதிருப்தி

குளக்கரையில் பொக்லைனில் நடக்கும் சீரமைப்பு பணி; விவசாயிகள் அதிருப்தி

குளக்கரையில் பொக்லைனில் நடக்கும் சீரமைப்பு பணி; விவசாயிகள் அதிருப்தி


ADDED : டிச 03, 2024 01:47 AM

Google News

ADDED : டிச 03, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளக்கரையில் பொக்லைனில் நடக்கும்

சீரமைப்பு பணி; விவசாயிகள் அதிருப்தி

புன்செய் புளியம்பட்டி, டிச. 2-

புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள, 451 ஏக்கர் பரப்பு கொண்ட காவிலி

பாளையம் குளம் தற்போது நிரம்பி உள்ளது. நேற்று முன்தினம் குப்பந்துறை அருகே குளத்தின் வடக்கு மண் கரையில் பிளவு ஏற்பட்டது. அந்த இடத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 20 அடி நீளத்துக்கு பிளவு ஏற்பட்டதாலும், பரவலாக மழை பெய்து வருவதாலும், கரையில் உடைப்பு ஏற்படும் முன் கரையை விரைந்து சீரமைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பிளவு ஏற்பட்டுள்ள இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம், நீர்வளத்துறை அதிகாரிகள் பணி மேற்கொண்டுள்ளனர். இதற்கு விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் பிளவு ஏற்பட்டுள்ள இடத்தில், பொக்லைன் இயந்திரம் மூலம் மண் நிரப்பும் பணி நடக்கிறது. ஆனால், பொக்லைன் இயந்திரத்தின் எடை தாங்காமல் கரை மேலும் சேதமடைய வாய்ப்புள்ளது. பணியாளர்கள் மூலம் சீரமைப்பு பணி செய்ய வேண்டும். மேலும் விரைந்து மணல் மூட்டை அடுக்கி கரையை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us