/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொட்டகைக்கு தீ வைத்தவருக்கு காப்பு
/
கொட்டகைக்கு தீ வைத்தவருக்கு காப்பு
ADDED : ஜூன் 04, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே உக்கரம், கேத்தாம்பாளையத்தில், பகுதி நேர ரேசன் கடை உள்ளது. இதன் முன் போட்டிருந்த ஓலை கொட்டகை நேற்று முன்தினம் தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
அந்த இடத்தில் மது போதையில் படுத்திருந்த மகேந்திரன், 47, குடிபோதையில் தீ வைத்தது தெரிய வந்தது. இது தெரிந்து மக்கள் கண்டித்தபோது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி கடத்துார் போலீசார், மகேந்திரனை நேற்று கைது செய்தனர்.