/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதை மகனை அடித்து கொன்ற ஓய்வு மின்வாரிய ஊழியர் கைது
/
போதை மகனை அடித்து கொன்ற ஓய்வு மின்வாரிய ஊழியர் கைது
போதை மகனை அடித்து கொன்ற ஓய்வு மின்வாரிய ஊழியர் கைது
போதை மகனை அடித்து கொன்ற ஓய்வு மின்வாரிய ஊழியர் கைது
ADDED : நவ 05, 2024 01:45 AM
போதை மகனை அடித்து கொன்ற
ஓய்வு மின்வாரிய ஊழியர் கைது
பவானி, நவ. 5-
அம்மாபேட்டை அருகேயுள்ள கோனேரிப்பட்டி, சூடமுத்தான்பட்டி, பம்ப் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 62; ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரின் மகன் நந்தகோபால், 32; கூலி தொழிலாளி. தந்தை, மகன் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி போதையில் வீட்டில் சண்டை போடுவது வழக்கம். கடந்த மாதம், 30ம் தேதி இரவு வழக்கம்போல் இருவரும் போதையில் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது தன்னையும், மனைவி இருசாயியையும் மகன் நந்தகோபால், செங்கல்லால் தாக்க வந்தபோது தவறி விழுந்து பலத்த காயமடைந்ததாக கூறி, பூனாச்சியில் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்காக மகனை கொண்டு சென்றனர். நேற்று முன்தினம் அவர் இறந்தார். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில், கட்டையால் மகனை அடித்து கொலை செய்ததை, பாலகிருஷ்ணன் ஒப்புக்கொண்டார். பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார், பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.