/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 23, 2026 04:38 AM
நம்பியூர்: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி, நம்பியூரில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை, நெடுஞ்சா-லைத்துறை உட்கோட்ட பொறியாளர் மலைச்சாமி, நம்பியூர் எஸ்.ஐ., கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
விழிப்புணர்வு ஊர்வலத்தில் உதவி பொறியாளர் லோகேஸ்வரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) மாலதி ஆகியோர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பிரசாரத்-துடன் மக்களுக்கு துண்டு பிரசுரமும் வழங்கினர்.* நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட கட்டுமானம் மற்றும் பரா-மரிப்பு துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி பவானியில் நடந்தது. இதில் பவானி அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளி மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர் விழிப்பு-ணர்வு பதாகைகளை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வ-லமாக சென்றனர். பேரணி நிறைவில் பவானி போக்குவரத்து வட்டார ஆய்வாளர் கஸ்துாரி தலைமையில், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

