sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஒரே கடையில் 2 நாள் திருட்டு; பவானியில் ஆசாமிகள் 'தில்'

/

ஒரே கடையில் 2 நாள் திருட்டு; பவானியில் ஆசாமிகள் 'தில்'

ஒரே கடையில் 2 நாள் திருட்டு; பவானியில் ஆசாமிகள் 'தில்'

ஒரே கடையில் 2 நாள் திருட்டு; பவானியில் ஆசாமிகள் 'தில்'


ADDED : ஜன 28, 2025 06:52 AM

Google News

ADDED : ஜன 28, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 55; புது பஸ் ஸ்டாண்டில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நகராட்சி கடையை வாடகைக்கு எடுத்து, இனிப்பு, கார வகை விற்பனை செய்து வருகிறார்.

கடந்த, ௨6ம் தேதி அதிகாலையில் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் இருவர் கடைக்குள் புகுந்தனர். 10 ஆயிரம் ரூபாய், காரம், இனிப்பு வகைகளை திருடி சென்றனர். 26ம் தேதி காலை கடை திறக்க வந்த கார்த்திகேயன் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அன்றைய தினமே பவானி போலீசாருக்கு புகாரளித்தார். மர்ம நபர்கள் கடையில் கைவரிசை காட்டிய சிசிடிவி கேமரா பதிவும் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்று அதிகாலையிலும் அதே ஆசாமிகள் கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்தனர். கடையில் பணம் இல்லாததால் திரும்பியுள்ளனர்.

நேற்றும் கடைக்கு வந்த கார்த்திகேயன் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்தார். இதுகுறித்த புகாரின்படி பவானி போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர். ஒரே கடையில் அடுத்தடுத்த நாட்களில், மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியது, வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us