ADDED : ஏப் 04, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளிலும், தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழுவினர் நேற்று முன்தினம் வரை, 1.43 கோடி ரூபாயை பறிமுதல் செய்திருந்தனர்.
மொடக்குறிச்சி தொகுதியில், 51,000 ரூபாய், பவானிசாகர் தொகுதியில், 2 லட்சம் ரூபாய் என, 2.51 லட்சம் ரூபாயை நேற்று பறிமுதல் செய்தனர். இத்துடன் சேர்த்து இதுவரை, 1 கோடியே, 45 லட்சத்து, 97,710 ரூபாயை பறிமுதல் செய்தனர். ஆவணங்கள் வழங்கியதன் அடிப்படையில், ஒரு கோடியே, 41 லட்சத்து, 28,710 ரூபாயை ஒப்படைத்துள்ளனர்.
