/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பறக்கும் படையால் பறிமுதல் செய்த ரூ.25.65 லட்சம் திரும்ப ஒப்படைப்பு
/
பறக்கும் படையால் பறிமுதல் செய்த ரூ.25.65 லட்சம் திரும்ப ஒப்படைப்பு
பறக்கும் படையால் பறிமுதல் செய்த ரூ.25.65 லட்சம் திரும்ப ஒப்படைப்பு
பறக்கும் படையால் பறிமுதல் செய்த ரூ.25.65 லட்சம் திரும்ப ஒப்படைப்பு
ADDED : ஜன 30, 2025 05:02 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தில், 25.65 லட்சம் ரூபாயை உரிய ஆவணங்கள் அடிப்படையில் திரும்ப வழங்-கினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக கடந்த, 7 முதல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன தணிக்கை செய்து, ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் பணம், பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த, 7 முதல் இதுவரை, 37 லட்சத்து, 24,560 ரூபாயை பறி-முதல் செய்து கருவூலத்தில் செலுத்தி இருந்தனர். உரிய ஆவணங்-களை சமர்பித்ததன் அடிப்படையில், 25 லட்சத்து, 65,060 ரூபாயை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர். மீதமுள்ள, 11 லட்சத்து, 59,500 ரூபாய் கருவூலத்தில் இருப்பு வைத்துள்ளனர்.
ரூ.1.50 லட்சம் பறிமுதல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பறக்கும் படை-யினர், வீரகவுண்டன் தலைமையில் பி.பி.அக்ரஹாரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கோவை, துடி-யலுார் எஸ்.எம்.பாளையத்தை சேர்ந்த கவுதமன் என்பவர், ஜவுளி வியாபாரம் தொடர்பாக, 1.50 லட்சம் ரூபாயை தனது ேஹாட்டா கன்சர்ன் காரில் எடுத்து வந்தார். அவரது வாக-னத்தை தணிக்கை செய்தபோது ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட, 1.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, கருவூ-லத்தில் செலுத்தினர்.

