/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
5 மாதமாக மீன்பிடி தொழில் கேள்விக்குறியால் சோகம்
/
5 மாதமாக மீன்பிடி தொழில் கேள்விக்குறியால் சோகம்
ADDED : ஜூன் 09, 2025 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி, 113 அடி-யாக உள்ளது. தற்போது காவிரி ஆற்றில் குடிநீருக்காக, 1,000 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில் வெண்டிபாளையத்தில் போதிய நீர்வரத்து இல்-லாததால், காவிரி ஆறு பாறைகளாக காட்சியளிக்கிறது. இதனால் ஐந்து மாதங்களாக மீன் பிடித்தல் கேள்விக்குறியாகி உள்ளது. வெண்டிபாளையம் மின் கதவணையில் நீர் மின் உற்பத்திக்காக நீர் தேக்கப்பட்டுள்ளது. ஒரு கதவணை மட்டும் திறக்கப்பட்டுள்ளது.