/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.11.39 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
/
ரூ.11.39 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
ADDED : நவ 22, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், நவ. 22-
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 330 மூட்டை காய்ந்த நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ, 67.52 ரூபாய் முதல் 76 ரூபாய் என, 8.22 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
* கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு, 129 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 68.59 ரூபாய் முதல், 79.66 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 44.60 குவிண்டால் நிலக்கடலை, 3.௧௭ லட்சம் ரூபாய்க்கு விற்றது.