/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தரமற்ற விதை விற்பனை : 52 நிறுவனங்களுக்கு சிக்கல்
/
தரமற்ற விதை விற்பனை : 52 நிறுவனங்களுக்கு சிக்கல்
தரமற்ற விதை விற்பனை : 52 நிறுவனங்களுக்கு சிக்கல்
தரமற்ற விதை விற்பனை : 52 நிறுவனங்களுக்கு சிக்கல்
ADDED : டிச 02, 2025 01:15 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி அறிக்கை:
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கேயம் பகுதிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதை மாதிரி சேகரித்து ஆய்வு செய்யப்பட்டது. மொத்தம், 3,123 விதை மாதிரிகளின் முளைப்பு திறன், இனத்துாய்மை செய்யப்பட்டது.
அவற்றுடன், 1,618 நெல் விதை மாதிரி, 696 மக்காச்சோளம், 337 பருத்தி, 104 பயிர் வகை, 418 காய்கறி பயிர்களின் விதைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றில், 52 விதை மாதிரி தரமற்றது என, அறிக்கை பெறப்பட்டது.
இதில், 19 நெல் விதை மாதிரி, 23 மக்காசோளம், 10 காய்கறி விதை அடக்கம். இதன்படி, மாவட்டத்தில் இதுவரை, 47 விதை விற்பனை நிலையங்கள் மீது துறை நடவடிக்கை; ஐந்து நிறுவனங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

