sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பொங்கலை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்

/

பொங்கலை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்

பொங்கலை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்

பொங்கலை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்


ADDED : ஜன 14, 2025 02:48 AM

Google News

ADDED : ஜன 14, 2025 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: போகி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இன்று பொங்கல், நாளை மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என, வரிசையாக பொங்கல் கொண்டாட்டத்திற்கு கிராமப்புறங்களில், மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இதையொட்டி, புன்செய்புளி-யம்பட்டி பகுதியில் பொங்கல் பொருட்கள் வியாபாரம் களை-கட்ட துவங்கியது. இதற்காக, பஸ் ஸ்டாண்ட், திரு.வி.க., கார்னர், பவானிசாகர் சாலை ஆகிய பகுதிகளில், தற்காலிக கடைகள்

அமைக்கப்பட்டு, வாழைக்கன்று, கரும்பு, மாவிலை, பூமாலை, பூளை பூ, அரசாணிக்காய், அவரை உள்ளிட்ட, பூஜைக்கு தேவை-யான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. விற்-பனை அதிகரித்ததால், இவற்றின்

விலையும் அதிகரித்தது. மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலம் என பல வகையான நிறங்களில் கோல மாவு மற்றும் கோலகட்டி விற்பனைக்காக வைக்கப்பட்-டது. ஒரு கிலோ கோல மாவு 20,30 ரூபாய் என விற்கப்பட்டது. கலர்

பவுடர்கள் ஒரு பாக்கெட்,10 முதல் 30 ரூபாய் வரை விற்றது. பொங்கல் வைக்க பயன்படும், வெல்லம் கிலோ 50 ரூபாய்க்கு மக்கள் வாங்கி சென்றனர்.கரும்பு விற்பனை ஜோர்...பொங்கல் விழாவையொட்டி, சங்ககிரி, வைகுந்தம் ஆகிய பகுதி-களில் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு, சந்தையில் விற்பனைக்காக குவிக்கப்பட்டது. மொத்தமாகவும், சில்லரையா-கவும் விற்பனை செய்யப்பட்டது.

கிராமப்புறங்களில் உள்ள சிறு வியாபாரிகள், கட்டு, கட்டாக வாங்கி சென்றனர். ஒரு ஜோடி கரும்பு, 80 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு விற்பனை ஆனது.மாடுகளுக்கு புதிய கயிறு தயார்..மாட்டு பொங்கலன்று, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, கழுத்தில் மணியை கட்டி, மாலை அணிவித்து, பல்வேறு அலங்காரம் செய்து, பொங்கல் படையலிட்டு மாடுக-ளுக்கு வழங்குவர். அப்போது கழுத்து

கயிறு, மூக்கணாங்கயிறு-களை புதியதாக கட்டுவர். இதற்காக, சந்தையில், மாட்டு பொங்க-லுக்காக அமைக்கப்பட்டுள்ள கடைகளில் ஒரு கயிறு, 20 முதல், 150 ரூபாய் வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்பட்டது.சங்கராந்தி பொங்கலுக்கு பயன்படுத்தும்,அவரை மொச்சைக்கும், அரசாணி காய்க்கும் கடும் கிராக்கி ஏற்பட்டது. திண்டுக்கல் மற்றும் சத்தியமங்கலம் ராமபயலுார் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு கிலோ எடையுள்ள

அரசாணி, 30 முதல் 60 ரூபாய்க்கு விற்றது. பல்வேறு வகையான பொருட்களை, பொது-மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றதால், புன்செய்புளியம்பட்டி பகுதி, களை கட்டியது.






      Dinamalar
      Follow us