ADDED : செப் 07, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, காவலர் தினத்தை முன்னிட்டு ஈரோடு ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தியாகிகள் துாணுக்கு, எஸ்.பி. சுஜாதா வீரவணக்கம் செலுத்தினார்.
பின் காவலர் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது. போலீஸ், பொதுமக்கள் கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டி நடந்தது. ஆயுதப்படையில் உள்ள ஆயுதங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மாவட்டத்தில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன் மற்றும் போலீஸ் அலுவலகத்தில், காவலர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.