ADDED : டிச 13, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு துாய்மை பணியாளர் சங்க மாநிலத்தலைவர் சண்முகம் வெளியிட்-டுள்ள அறிக்கை: சென்னை மாநகர துாய்மை பணியாளர் கோரிக்-கைகளை ஏற்று வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு மாறாக, அவர்-களை பணிநீக்கம் செய்து பழிவாங்கியது தவறான செயல்.
மீண்டும் பணி கேட்டு போராடும் துாய்மை பணியாளர்களை கைது செய்வது ஏற்புடைய செயல் அல்ல. தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களின் நியாய-மான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலட்சியம் காட்டும் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

