sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாலிபர் கொலையில் சரண்; பிளம்பர் சிறையிலடைப்பு

/

வாலிபர் கொலையில் சரண்; பிளம்பர் சிறையிலடைப்பு

வாலிபர் கொலையில் சரண்; பிளம்பர் சிறையிலடைப்பு

வாலிபர் கொலையில் சரண்; பிளம்பர் சிறையிலடைப்பு


ADDED : மே 29, 2024 07:17 AM

Google News

ADDED : மே 29, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : மொடக்குறிச்சி அருகே மலையம்பாளையம், பள்ளர் வீதி முனியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் ஹரீஷ், 21; அதே பகுதியை சேர்ந்த பிளம்பர் வெள்ளியங்கிரி, 36; இருவருக்கும் பெண் விவகாரம் தொடர்பாக முன் விரோதம் இருந்தது.

சோளங்காபாளையம் டாஸ்மாக் கடை அருகே, இரவில் நண்பருடன் பேசி கொண்டிருந்த ஹரீஷை, வெள்ளியங்கிரி கத்தியால் குத்தியதில் இறந்தார். கொலையாளிகளை பிடிக்க கோரி, ஈரோடு அரசு மருத்துவமனையில் ஹரீஷின் உறவினர்கள் தர்ணா, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் கொடுமுடி குற்றவியல் மற்றும் உரிமையியல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வெள்ளியங்கிரி நேற்று முன்தினம் மாலை சரணடைந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம் இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிவானந்தன், பூசாரி கனகராஜ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான செங்கோட்டையன் என்பவரை, தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us