ADDED : டிச 07, 2024 07:17 AM
காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், கார்த்திகை மாத சஷ்டி சிறப்புடையதாக கருதப்படு-கிறது. இந்த தினமான நேற்று, சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. இதையடுத்து
மயில் வாக-னத்தில் கோவில் உள்பிரகாரத்தில், சுவாமி வலம் வந்தார். திர-ளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.14ல் ஊரக திறனாய்வு தேர்வு2,700 மாணவர்களுக்கு ஏற்பாடுஈரோடு: அரசு தேர்வுகள் இயக்கம் மூலம், ஊரக திறனாய்வு தேர்வு (டிரஸ்ட் தேர்வு) 2024-25ம் கல்வி ஆண்டுக்கு வரும், 14ல் நடக்க
உள்ளது. இக்கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் அரசு, நகரவை, அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்
பள்-ளிகளிலும், 2,700 மாணவர் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்-காக மாவட்ட அளவில், 15 தேர்வு மையங்கள் தெரிவு
செய்யப்-பட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகை பிளஸ் 2 வரை
காசோலையாக வழங்கப்-படும்.