ADDED : ஜன 13, 2026 07:10 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில், காத்திருப்பு போராட்-டத்தை தொடர்ந்தனர். சம வேலைக்கு சம ஊதியம் உள்பட பல்-வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக அளவில் போராடி வருகின்றனர்.
இதன்படி நேற்று காலை, 10:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை ஆறாவது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருந்துறை ஒன்றிய ஒருங்கி-ணைப்பாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
