ADDED : அக் 15, 2024 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.59,000க்கு தேங்காய் விற்பனை
ஈரோடு, அக். 15-
ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு. 3,799 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ தேங்காய், 33.69 ரூபாய் முதல், 38.50 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 1,580 கிலோ தேங்காய், 59,472 ரூபாய்க்கு விற்பனையானது.
ரூ.90 ஆயிரத்துக்கு கருப்பட்டி ஏலம்
கோபி, அக். 15-
கோபி சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. பனங்கருப்பட்டி சீசன் நிறைவால், 13வது வாரமாக வரத்தாகவில்லை. தென்னங்கருப்பட்டி, 600 கிலோ வரத்தாகி, ஒரு கிலோ, 150 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான அனைத்து தென்னங்கருப்பட்டியும்,
90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.