/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் பற்றாக்குறை
/
காங்கேயம் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் பற்றாக்குறை
ADDED : ஜூலை 28, 2024 03:02 AM
காங்கேயம்: காங்கேயத்தில், 12 ரேசன் கடைகளில், 12 ஆயிரம் அட்டைதாரர்-களில், 9,௦௦௦ பேர் மண்ணெண்ணெய் கார்டுதாரராக உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஒரு சிலிண்டர் பயன்படுத்தும் அட்டை-தாரர்களுக்கும் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நடப்பு மாதத்தில் சிலிண்டர் அல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் மண்ணெண்ணெய் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கேயம் டி.எஸ்.ஓ., கூறியதா-வது: திருப்பூர் மாவட்டத்திற்கே சென்னையில் இருந்து மண்-ணெண்ணெய் வழங்கல் குறைவாக உள்ளது. ஒரு அட்டைக்கு ஒரு லிட்டர் வழங்கினால் கூட, 9,௦௦௦ லிட்டர் வழங்க வேண்டும். ஆனால், 3,௦௦௦ லிட்டர் மட்டுமே காங்கேயத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களுக்கு வழங்குவதில் சிக்கலும், தாமதமும் ஏற்பட்-டுள்ளது. இவ்வாறு கூறினார்.

