/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சீதா திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்
/
சீதா திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்
சீதா திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்
சீதா திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்
UPDATED : ஏப் 11, 2025 02:56 AM
ADDED : ஏப் 11, 2025 01:42 AM
சேலம்:சேலம், செவ்வாய்ப்பேட்டை வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் சார்பில், 97ம் ஆண்டு ராமநவமி உற்சவம் கடந்த, 6ல் தொடங்கியது. வாசவி கல்யாண மண்டபத்தில் தினமும் பூஜை நடந்தது. நேற்று காலை, 'அஸ்வ' பூஜை நடத்தப்பட்டது. புஷ்ப பல்லக்கில், 'ராகவனுடன் வைதேகி' பவனி ஊர்வலம் நடந்தது. மதியம், திருமாங்கல்ய யாக பூஜையுடன், சீதா திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து மாலை மாற்றுதல், பூப்பந்தாட்டம், தேங்காய் உருட்டுதல் வைபவங்கள், மகிளா சமாஜ பெண்களால் நடத்தப்பட்டது. மாலை, தம்பதி சமேதரராய் சீதா ராமச்சந்திர மூர்த்தி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பின் பஜனை பாடல்கள், திருவீதி உலாவுடன் திருக்கல்யாண உற்சவம் நிறைவு பெற்றது.
இன்று, 108 சங்கு பூஜை நடக்கிறது. 15ல், அனுமன், லட்சுமணருடன் சீதா ராமர் திருவீதி உலா, 16ல் ஆஞ்சநேயர் உற்சவம், 19ல் ஊஞ்சல் உற்சவத்துடன் ராமநவமி விழா நிறைவு பெறும்.