/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாப்ட்வேர் கம்பெனி பெண் ஊழியர் சாவு
/
சாப்ட்வேர் கம்பெனி பெண் ஊழியர் சாவு
ADDED : டிச 22, 2025 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சிவகிரி கொல்லன்கோவில் தாண்டாம்பாளையம் பேரிச்சிபா-ளையம் மணியன்காட்டு தோட்டத்தை சேர்ந்த கவுதம் மனைவி நதியா, 28; கடந்த, 2023 ஜூன் 29ல் திருமணம் நடந்தது. தம்ப-திக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சென்னை டி.சி.எஸ்., கம்பெ-னிக்கு, வீட்டில் இருந்தபடி நதியா வேலை செய்தார். கோவை தனியார் கம்பெனியில் கவுதம் வேலை செய்கிறார்.
கடந்த, 20ம் தேதி காலை, 10:30 மணிக்கு நதியாவை கவுதம் எழுப்ப முயன்றார். அப்போது பேச்சு மூச்சின்றி கிடந்தார். சிவ-கிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், பரி-சோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்-தனர். சிவகிரி போலீசார், ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.

