/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புதிய வாக்காளர்களை சேர்க்க கல்லுாரிகளில் சிறப்பு ஏற்பாடு
/
புதிய வாக்காளர்களை சேர்க்க கல்லுாரிகளில் சிறப்பு ஏற்பாடு
புதிய வாக்காளர்களை சேர்க்க கல்லுாரிகளில் சிறப்பு ஏற்பாடு
புதிய வாக்காளர்களை சேர்க்க கல்லுாரிகளில் சிறப்பு ஏற்பாடு
ADDED : டிச 22, 2025 06:05 AM
ஈரோடு:வாக்காளர் சிறப்பு திருத்த பணி முடிந்து, கடந்த, 19ல் வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. பட்டி-யலில் பெயர் விடுபட்டிருந்தால் உடனடியாக பெயர் சேர்த்தலுக்கு-ரிய விண்ணப்பத்தை ஒரு மாதத்துக்குள் வழங்க தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கல்லுாரி-களில் பயிலும், 18 வயது பூர்த்தியான மாணவ, மாணவிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்-டுள்ளது.
இதுபற்றி வருவாய் துறையினர் கூறியதாவது:மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து கல்-லுாரிகளிலும் ஒரு துாதுவர் நியமிக்கப்படுவார். இவர் அந்தந்த கல்-லுாரிகளை சேர்ந்தவராக இருக்க வேண்டும். கல்லுாரியில் 18 வயது பூர்த்தியான மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்க-ளிடம் படிவம்-6ஐ வழங்குவார். அவர்கள் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இப்பணி ஜன.18 வரை தொடரும். வரும் 27, 28ல் அந்தந்த ஓட்டுசாவடி மையங்களில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடக்கிறது. இவ்வாறு கூறினர்.

