sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சொக்கநாதர் கோவில் படித்துறை சேதம்; சீரமைக்க கோரிக்கை

/

சொக்கநாதர் கோவில் படித்துறை சேதம்; சீரமைக்க கோரிக்கை

சொக்கநாதர் கோவில் படித்துறை சேதம்; சீரமைக்க கோரிக்கை

சொக்கநாதர் கோவில் படித்துறை சேதம்; சீரமைக்க கோரிக்கை


ADDED : டிச 23, 2024 09:28 AM

Google News

ADDED : டிச 23, 2024 09:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: காவிரிக்கரையில் அமைந்துள்ள கோவிலின் படித்துறை சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளதால், பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

அம்மாபேட்டை காவிரிக்கரையில், 800 ஆண்டு பழமையான சொக்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் முக்கிய தினங்களில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடக்கும். இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள, 20க்கும் மேற்பட்ட ஊர்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதில்லாமல் பக்தர்கள், காவிரியில் தீர்த்தம் எடுத்து செல்வதும், புனித நீராடி செல்வதும் வழக்கம். சில தினங்களுக்கு முன், காவிரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள படித்துறையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

இதனால் பக்தர்கள் படித்துறையை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. படித்துறையில் புனித நீர் எடுக்க சென்ற ஒரு பக்தர் கல் தடுக்கி விழுந்து காயமடைந்தார். தற்போது மார்கழி மாதம் என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. அதேசமயம் படித்துறை இடிந்தது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கூறியும் நடவடிக்கை இல்லை என, பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே ஈரோடு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us