/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறையில் இன்று உழவரை தேடி சிறப்பு முகாம்
/
பெருந்துறையில் இன்று உழவரை தேடி சிறப்பு முகாம்
ADDED : மே 29, 2025 01:24 AM
ஈரோடு, பெருந்துறை வேளாண் உதவி இயக்குனர் பிரசாத் விடுத்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இயங்கும், அனைத்து துறைகளின் வட்டார அலுவலர்கள், சார்பு துறை அதிகாரிகள், உழவர்களை அவர்களது கிராமங்களில் நேரடியாக சந்திக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அங்கு, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி, பயிர் சார்ந்த தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் துறை, சார்பு துறைகளின் நலத்திட்டங்களை எடுத்து கூறி, பயன்பெற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதன்படி, 'உழவரை தேடி சிறப்பு முகாம்' இன்று (29) காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். பெருந்துறை வட்டாரம், பெரியவிழாமலை பஞ்., பொது சேவை மைய கட்டடம், பட்டக்காரன்பாளையம் பஞ்., வளாகத்திலும் இன்று காலை, 10:00 மணிக்கு முகாம் நடக்கிறது. இப்பகுதி விவசாயிகள் பங்கேற்று பயன் பெறலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.