sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெளிநாடுகள் பார்சலுக்கு அஞ்சலகத்தில் சிறப்பு வசதி

/

வெளிநாடுகள் பார்சலுக்கு அஞ்சலகத்தில் சிறப்பு வசதி

வெளிநாடுகள் பார்சலுக்கு அஞ்சலகத்தில் சிறப்பு வசதி

வெளிநாடுகள் பார்சலுக்கு அஞ்சலகத்தில் சிறப்பு வசதி


ADDED : செப் 06, 2025 01:58 AM

Google News

ADDED : செப் 06, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, :ஈரோடு அஞ்சல் கோட்டத்தில், ஈரோடு, பவானி, கோபி என மூன்று தலைமை அஞ்சலகங்கள், 61 துணை அஞ்சலகங்கள் உட்பட, 64 கணினி மயமாக்கப்பட்ட அஞ்சல் அலுவலகங்கள் மூலம், வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பப்படுகிறது.

அஞ்சல் அலுவலகம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல் நிலவரத்தை ஆன்லைனில் அறியலாம். அஞ்சல் துறை மூலம் குறைந்த செலவில், பாதுகாப்பாக, விரைவாக பார்சல்கள் சென்றடைவதால், அஞ்சலகத்தை நாடலாம். உலகில், 106 நாடுகளுக்கு விரைவு தபால் சேவை, 200 நாடுகளுக்கு வான்வழி பார்சல் சேவை, 46 நாடுகளுக்கு ஐ.டி.பி.எஸ்., எனப்படும் சேவைகளும் அஞ்சல் துறை வழங்குகிறது. ஈரோடு தலைமை அலுவலகத்ததில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும்போது, பேக்கிங் ஏற்பாடு செய்து தரப்படும்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சிறிய, பெரிய வணிக நிறுவனங்களுக்கு எளிய வகையில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்ப ஏதுவாக, டி.என்.கே., வசதியும் உள்ளது. இத்தகவலை ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் செய்திக்

குறிப்பில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us