/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளி மாணவர்களுக்கு ஜன., 8ல் பேச்சுபோட்டி
/
பள்ளி மாணவர்களுக்கு ஜன., 8ல் பேச்சுபோட்டி
ADDED : டிச 31, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழ் வளர்ச்சி துறை சார்பில், ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு வரும், ௮ம் தேதி, பேச்சு போட்டி ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில் காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம், ரோசாவின் ராசா என்ற தலைப்பில் ஏதாவது ஒன்றில் பேச வேண்டும். மாவட்ட அளவில் பள்ளி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, 5,௦௦௦ ரூபாய்; இரண்டாம் பரிசாக, 3,௦௦௦ ரூபாய்; மூன்றாம் பரிசாக, 2,௦௦௦ ரூபாய் வழங்கப்படும். இத்தகவலை ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.