ADDED : ஜூலை 12, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:கொடுமுடி போலீஸ் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் மகாலிங்கம், 57; இவரது சொந்த ஊர் கொடுமுடியை அடுத்த வெங்கம்பூர். இவருக்கு தைராய்டு பிரச்னை இருந்தது. ஏற்கனவே ஆப்பரேஷனும் செய்திருந்தார்.
மீண்டும் பிரச்னை ஏற்பட்டு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்த எஸ்.எஸ்.ஐ.,க்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
