/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநில அளவிலான எறிபந்து போட்டி; முன்னாள் அமைச்சர் துவக்கி வைப்பு
/
மாநில அளவிலான எறிபந்து போட்டி; முன்னாள் அமைச்சர் துவக்கி வைப்பு
மாநில அளவிலான எறிபந்து போட்டி; முன்னாள் அமைச்சர் துவக்கி வைப்பு
மாநில அளவிலான எறிபந்து போட்டி; முன்னாள் அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : டிச 31, 2024 06:59 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் ஈங்கூரில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில், த்ரோபால் அகாடமி மற்றும் இந்துஸ்தான் கல்லுாரி இணைந்து மூன்றாமாண்டு மாநில அளவிலான எறிபந்து விளையாட்டு போட்டி நடந்தது.
ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டி நடந்தது. விளையாட்டு போட்டியை சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கல்லுாரி தாளாளர் ராமன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி ஈங்கூர் கார்த்தி, பெருந்துறை முன்னாள் டவுன் பஞ்., தலைவர் சரஸ்வதி துரைராஜ், நிர்வாகிகள் நாகராஜ், வெங்கடாசலம், ரமேஷ், பிரதீப், கந்தசாமி, சண்முகம், கிருஷ்ணசாமி, லோகநாதன், ராயல் குமார் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.