ADDED : செப் 13, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, சென்னிமலை யூனியன் முகாசிப்பிடாரியூர் ஊராட்சி சென்னியங்கிரி வலசை சேர்ந்த விவசாயி பிரகாஷ், 40; தனக்கு சொந்தமான, 1.5 ஏக்கர் தோட்டத்தில் மூன்று பக்கம் கம்பி வேலி, ஒரு பக்கம் கள்ளி வேலி அமைத்து, அதற்குள் பட்டி அமைத்து, 12 வெள்ளாடு, 10 செம்மறியாடு வளர்த்து வருகிறார்.
நேற்று காலை பட்டிக்கு சென்றபோது, தெரு நாய்கள் கடித்ததில் இரண்டு செம்மறியாடு இறந்து கிடந்தது. மூன்று ஆடுகள் படுகாயம் அடைந்தன. ஒரு ஆட்டை காணவில்லை. வருவாய் துறையினர், கால்நடை துறையினர் ஆய்வு செய்தனர்.