/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறிய ரக பேட்டரியை விழுங்கிய மாணவன்
/
சிறிய ரக பேட்டரியை விழுங்கிய மாணவன்
ADDED : நவ 25, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், வெள்ளித்திருப்பூர் அருகே சொக்கநாதமலையூரை சேர்ந்த பெரியசாமி மகன் மவுலிதரன், 6; நடுநிலைப்பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவன். பொம்மையில் போடும் சிறிய ரக பேட்டரியை வாயில் போட்டு மவுலிதரன் நேற்று விளையாடியபோது விழுங்கி விட்டான்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், இரைப்பைக்கு கீழே பேட்டரி இறங்கி விட்டதால், மலம் வழியாக வெளியேறும் எனக்கூறி அனுப்பி வைத்தனர்.

