sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அகழி போல் குழி பறித்து வழித்தடம் மறிப்பு பள்ளி செல்ல முடியாமல் மாணவர் தவிப்பு

/

அகழி போல் குழி பறித்து வழித்தடம் மறிப்பு பள்ளி செல்ல முடியாமல் மாணவர் தவிப்பு

அகழி போல் குழி பறித்து வழித்தடம் மறிப்பு பள்ளி செல்ல முடியாமல் மாணவர் தவிப்பு

அகழி போல் குழி பறித்து வழித்தடம் மறிப்பு பள்ளி செல்ல முடியாமல் மாணவர் தவிப்பு


ADDED : அக் 26, 2024 07:59 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் அருகே முத்துக்கவுண்டன்புதுாரை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், ஊர்மக்கள், அந்தியூர் தாசில்தார் அலுவலகத்துக்கு நேற்று வந்து, மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதா-வது:

நாங்கள் இப்பகுதியில் ஐந்து தலைமுறைகளாக வசித்து, விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் அருகில் உள்ள மொசக்கவுண்-டனுார் அரசு பள்ளியில் படிக்கின்றனர். நாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த நடைபா-தையில், நேற்று முன்தினம் மாலை அப்-பகுதியை சேர்ந்த சிலர், இயந்திரம் மூலம் பாதையில் அகழிபோல் குழி பறித்துள்ளனர்.இதனால் மாணவ, மாணவிகள், ௪ கி.மீ., துாரம் சுற்றி பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் இதுகுறித்து உரிய நடவ-டிக்கை எடுத்து, எங்கள் குழந்தைகள் பள்ளி சென்று வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்-ளனர்.

நேற்று பாதை அடைக்கப்பட்டதால், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லமுடியாமல், 15க்கும் மேற்பட்டோர், பெற்றோருடன் தாலுகா அலுவலகம் வந்திருந்தனர். தாசில்தார் கவியரசு இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us