தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அம்பேத்கர் சிலையிடம் மனு வழங்கிய மாணவர்கள்

அம்பேத்கர் சிலையிடம் மனு வழங்கிய மாணவர்கள்

அம்பேத்கர் சிலையிடம் மனு வழங்கிய மாணவர்கள்


ADDED : ஆக 20, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:போராடும் உரிமையை கட்டுப்படுத்த நினைக்கும் அரசின் சுற்றறிக்கையை கண்டித்து, ஈரோடு ப.செ., பார்க்கில் உள்ள அம்பேத்கர் சிலையிடம் மனு வழங்கினர்.

கல்லுாரி மாணவ, மாணவியர், இளைஞர்கள் போராட்டம், கிளர்ச்சிகளில் பங்கேற்பதை தடை செய்ய, ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்வது குறித்து, தமிழக அரசு கல்லுாரி கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டு, சிறிது நேரத்தில் திரும்ப பெறப்பட்டது.

இவ்வாறான அடக்குமுறை, சுற்றறிக்கை மிரட்டல்கள் கூடாது எனக்கோரி இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலர் நவீன், அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலர் விஸ்வநாதன் தலைமையில், ஈரோடு பி.எஸ்.பார்க்கில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின், அதுபோன்ற அடக்குமுறை, சுற்றறிக்கை கூடாது. போராடும் உரிமையை பாதுகாக்க வேண்டும் எனக்கோரி, அங்குள்ள அம்பேத்கர் சிலையிடம் மனு வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us