sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டிச., 19ல் ஈரோட்டுக்கு முதல்வர் வருகை விழா மேடை அமைப்பது பற்றி ஆய்வு

/

டிச., 19ல் ஈரோட்டுக்கு முதல்வர் வருகை விழா மேடை அமைப்பது பற்றி ஆய்வு

டிச., 19ல் ஈரோட்டுக்கு முதல்வர் வருகை விழா மேடை அமைப்பது பற்றி ஆய்வு

டிச., 19ல் ஈரோட்டுக்கு முதல்வர் வருகை விழா மேடை அமைப்பது பற்றி ஆய்வு


ADDED : நவ 28, 2024 01:22 AM

Google News

ADDED : நவ 28, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிச., 19ல் ஈரோட்டுக்கு முதல்வர் வருகை

விழா மேடை அமைப்பது பற்றி ஆய்வு

ஈரோடு, நவ. 28-

ஈரோட்டில் டிச., 19, 20 ஆகிய நாட்களில் நடக்கும் அரசு விழா மற்றும் தி.மு.க., நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வருகை புரிய உள்ள நிலையில், சோலாரில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மேடை அமைப்பது பற்றி அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.

டிச., 19ல் முதல்வர் ஸ்டாலின் ஈரோடு வருகை புரிகிறார். அன்று, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், அரசின் திட்டங்களை கள ஆய்வு செய்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மறுதினம் (20) ஈரோடு மாவட்டத்தில் உள்ள, தி.மு.க., நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக, ஈரோடு அடுத்த சோலாரில் அமைந்து வரும் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் விழா மேடை அமைக்க, அந்த இடத்தை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் ஆய்வு செய்தனர். பொதுமக்கள், பயனாளிகள், வாகன நிறுத்தம், அடிப்படை வசதிகள், முதல்வர் வந்து செல்வது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி எஸ்.பி., ஜவகர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசித்தனர்.மாநகராட்சி இணை ஆணையர் தனலட்சுமி, மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர்

நல்லசிவம் உட்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us