/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலி குளிர்பான விற்பனையை தடுக்க ஆய்வு; மாவட்டத்தில் நான்கு சிறப்பு குழு அமைப்பு
/
போலி குளிர்பான விற்பனையை தடுக்க ஆய்வு; மாவட்டத்தில் நான்கு சிறப்பு குழு அமைப்பு
போலி குளிர்பான விற்பனையை தடுக்க ஆய்வு; மாவட்டத்தில் நான்கு சிறப்பு குழு அமைப்பு
போலி குளிர்பான விற்பனையை தடுக்க ஆய்வு; மாவட்டத்தில் நான்கு சிறப்பு குழு அமைப்பு
ADDED : மார் 11, 2025 06:48 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், போலி குளிர்பான விற்பனையை தடுக்க, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சர்வ சாதாரணமாக வெப்பத்தின் தாக்கம், 100 டிகிரியை கடந்து செல்கிறது. இதனால் மக்கள், வாகன ஓட்டிகள் குளிர்பானங்களை நாடுகின்றனர். இதனால் கடைகளிலும், சாலையோர தற்காலிக கடைகளிலும் இவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தங்க விக்னேஷ் கூறியதாவது: போலி குளிர்பானங்கள் உடலுக்கு கடும் கேடு விளைவிக்கும். இதை கண்டுபிடித்து தடுக்க நான்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நேற்று முதல் கண்காணிப்பை தொடங்கி விட்டனர். இதில் மொடக்குறிச்சி பகுதியில் ஒரு நிறுவனம், பழைய பாட்டில்களில் குளிர்பானத்தை அடைத்து விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எலுமிச்சம் பழம், பிற ஜூஸ், புரூட் ஜூஸ், பாதாம்பால், சோடா உள்ளிட்ட குளிர்பானம் தயாரிக்கும் குடிசை தொழில் செய்வோரும், கட்டாயமாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் உரிமம் பெற்று தயாரித்து விற்க வேண்டும். சூரிய ஒளியில் அதிக நேரம் குளிர்பானங்கள் படும்படி வைக்கக்கூடாது. குளிர்பான பாட்டிலில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி கட்டாயம் இடம் பெற வேண்டும். ரோட்டோரங்களில் வைத்து குளிர்பானம் விற்றாலும் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு கூறினார்.