/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீட்டு மனை பட்டா கேட்டு மனு வழங்கல்
/
வீட்டு மனை பட்டா கேட்டு மனு வழங்கல்
ADDED : நவ 26, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டு மனை பட்டா
கேட்டு மனு வழங்கல்
ஈரோடு, நவ. 26-
பவானி, குருப்பநாயக்கன்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது:
நாங்கள் அன்றாடம் கூலி வேலை செய்து, பிழைத்து வருகிறோம். ஒவ்வொரு வீட்டிலும் நான்கு முதல், 10 பேர் வரை கொண்ட குடும்பமாக உள்ளோம். இதனாலும், எங்களுக்கு வருவாய் குறைவு என்பதாலும், வாடகைக்கு வீடு எடுத்து வசிக்க வழி இல்லை. எங்களது குடும்பத்தினர் வசிக்கும்படி இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.