/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவிலுக்கு கொடிமரம் உபயம் ஊர்வலமாக கொண்டு சேர்ப்பு
/
கோவிலுக்கு கொடிமரம் உபயம் ஊர்வலமாக கொண்டு சேர்ப்பு
கோவிலுக்கு கொடிமரம் உபயம் ஊர்வலமாக கொண்டு சேர்ப்பு
கோவிலுக்கு கொடிமரம் உபயம் ஊர்வலமாக கொண்டு சேர்ப்பு
ADDED : அக் 13, 2024 08:38 AM
பவானி: இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள, பவானி செல்லியாண்டியம்மன் கோவிலில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் கோவிலுக்கு, 27 அடி உயரத்தில் வேங்கை மரத்-தாலான கொடிமரம் கோவிலுக்கு
உபயமாக வழங்கப்பட்டது. நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரித்து, லாரி
மூலம் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பழனியாண்டவர் கோவில் வீதி.
பஜனை வீதி, அந்தியூர் பிரிவு, தேர்வீதி, பூக்கடைவீதி வழியாக, செல்லியாண்டியம்மன்
கோவி-லுக்கு கொடிமரம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழிநெ-டுக கொடிமரத்தை தொட்டு
பக்தர்கள் வணங்கினர். நவம்பர் மாதம் கோவில் முன்பு நடப்படும் எனவும் தெரிகிறது.