sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைந்தபட்ச ஊதியம் வலியுறுத்தி தொழிலாளர் துறையுடன் பேச்சு

/

குறைந்தபட்ச ஊதியம் வலியுறுத்தி தொழிலாளர் துறையுடன் பேச்சு

குறைந்தபட்ச ஊதியம் வலியுறுத்தி தொழிலாளர் துறையுடன் பேச்சு

குறைந்தபட்ச ஊதியம் வலியுறுத்தி தொழிலாளர் துறையுடன் பேச்சு


ADDED : டிச 25, 2024 01:41 AM

Google News

ADDED : டிச 25, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, டிச. 25--

ஈரோடு மாவட்ட உள்ளாட்சி துறை பணியாளர்களுக்கு, அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, தொழிலாளர் நலத்துறையுடன், தொழிற்சங்கத்தினர் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது.

தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) திருஞானசம்பந்தம் முன்னிலையில் ஈரோடு மாவட்ட உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் சின்னசாமி, மணியன், ரவி, நகராட்சிகள், டவுன் பஞ்.,கள், பஞ்.,களின் அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. துணை ஆணையர் தனலட்சுமி, ஈரோடு நகர் நல அலுவலர் கார்த்திகேயன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கலெக்டர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை கடந்த ஏப்., 1 முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும். அதுபோல ஓட்டுனர்கள், குடிநீர் வினியோக பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியம் தர வேண்டும். ஈரோடு மாநகராட்சி உட்பட உள்ளாட்சிகளில் தொழிலாளர்களுக்கு பி.எப்., - இ.எஸ்.ஐ., திட்டத்தை அமலாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us