/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 09, 2025 02:23 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில், ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலர் பொன்பாரதி தலைமை வகித்தார்.
தி.மு.க., தேர்தல் அறிக்கை எண்-153ஐ நிறைவேற்றும் விதமாக தற்காலிக, ஒப்பந்த பணியாளர்களான டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வு பெறும் வயதை, 60 ஆக உயர்த்த வேண்டும். இ.எஸ்.ஐ., - மருத்துவ திட்டத்தை அமலாக்க வேண்டும். இ.பி.எப்., குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மது விற்பனை இலக்கை யூ.பி.ஐ., - பி.ஓ.எஸ்., மூலம் திணிக்கக்கூடாது.காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை ஊழியர்கள் மீது திணிக்கக்கூடாது. மாற்று வழியில் அமலாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.