/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டாஸ்மாக் சூப்பர்வைசர் லாரி மோதியதில் பலி
/
டாஸ்மாக் சூப்பர்வைசர் லாரி மோதியதில் பலி
ADDED : செப் 03, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், வெள்ளகோவில், உப்புபாளையத்தை சேர்ந்தவர் முருகப்பன், 56; வெள்ளகோவில் மடாமேடு டாஸ்மாக் கடை சூப்பர்வைசர். நேற்று முன்தினம் மதியம் கடைக்கு ஸ்பிளண்டர் பைக்கில் சென்றார்.
செம்மாண்டம்பாளையம் அருகே சென்றபோது, டிப்பர் லாரி மோதியதில், தலையில் பலத்த அடிபட்டது. அப்பகுதியினர் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்து, மேல் சிகிச்சைக்காக கோவை செல்லும்போது வழியில் இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.