ADDED : ஏப் 18, 2025 01:10 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு, ஆர்.என்.புதுார், அமராவதி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 60; டெய்லரான இவர், நேற்று முன்தினம் மாலை சுண்ணாம்பு ஓடை பகுதியில் சாலையை கடந்தார். அப்போது மொபட் மோதியதில் தலை, நெற்றியில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.
அப்பகுதி மக்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராதா
கிருஷ்ணன் உயிரிழந்தார்.
கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திய திருப்பூரை சேர்ந்த பாலமுருகன் என்பவரை தேடி வருகின்றனர்.
