/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு
/
ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு
ADDED : ஜூலை 03, 2025 01:20 AM
ஈரோடு, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக, பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் இன்று (3ல்) நடக்கிறது.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான ஆன்லைன் கவுன்சிலிங் நடந்தது. உயர்நிலைப் பள்ளி அளவில் இருவரும், மேல்நிலைப் பள்ளி அளவில் எட்டு பேரும் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்து இருந்தனர்.
ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடந்தது. இன்று முதுகலை ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடக்கிறது. ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது.