sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரிவர்ஸ் வந்த காரால் விபத்து லாரி ஏறியதில் வாலிபர் பலி

/

ரிவர்ஸ் வந்த காரால் விபத்து லாரி ஏறியதில் வாலிபர் பலி

ரிவர்ஸ் வந்த காரால் விபத்து லாரி ஏறியதில் வாலிபர் பலி

ரிவர்ஸ் வந்த காரால் விபத்து லாரி ஏறியதில் வாலிபர் பலி


ADDED : ஜூலை 15, 2025 01:39 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, சென்னிமலை யூனியன் பசுவபட்டி ஊராட்சி கணபதிபாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகன் சஞ்சீவ், 26; சிப்காட் தனியார் நிறுவன ஊழியர்.

நேற்று மதியம் வேலைக்கு சிப்காட் செல்ல, ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் புறப்பட்டார். சென்னிமலை-பெருந்துறை சாலையில் பாலமுருகன் தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகில் சென்றார்.

அப்போது வெள்ளோடு, ஞானிபாளையத்தை சேர்ந்த மயில்வாகனன், 41; தனது எலக்ட்ரிக் காரில் ரிவர்ஸ் எடுத்து சாலைக்கு வந்தார். திடீரென வந்ததால் சஞ்சய் ஓட்டிச் சென்ற பைக் ஹேண்டில் பார், காரின் பின்பகுதியில் இடித்து நிலைதடுமாறியதில், சாலையில் பைக்குடன் விழுந்தார். அதேசமயம் சஞ்சீவ் பைக்குக்கு பின்னால் வந்த லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது ஏறி இறங்கியது.

இதில் பலத்த காயமடைந்த சஞ்சீவ், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். லாரி ஓட்டி வந்த சேலம் மாவட்டம் பொன்னாரம்பட்டி, பரவக்காடு பூபதியிடம், 61, சென்னிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us