ADDED : டிச 06, 2024 07:44 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: பவானி புன்னம் அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஐயப்பன், 62; கோவில் பூசாரி. பவானியை சேர்ந்த, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் படி, பவானி அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன் தினம் ஐயப்பனை கைது செய்தனர்.
