sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விளிம்பு நிலை தொழிலாளர்களை குறிவைத்து நடந்த ஜவுளி விற்பனை

/

விளிம்பு நிலை தொழிலாளர்களை குறிவைத்து நடந்த ஜவுளி விற்பனை

விளிம்பு நிலை தொழிலாளர்களை குறிவைத்து நடந்த ஜவுளி விற்பனை

விளிம்பு நிலை தொழிலாளர்களை குறிவைத்து நடந்த ஜவுளி விற்பனை


ADDED : அக் 21, 2025 01:15 AM

Google News

ADDED : அக் 21, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாநகரில் ப.செ.,பார்க், மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ்.வீதி உள்ளிட்ட இடங்கள் ஜவுளிக்கடைகள் நிறைந்த பகுதி. இங்கு மொத்தம், சில்லறை விற்பனையில் துணி விற்கப்படுவதால் வியாபாரிகள் மட்டுமின்றி மக்களும் அதிகம் வருவர். தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே தற்காலிக கடைகள் அமைப்பு, மழையால் வியாபாரம் பாதித்ததாக வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். இருப்பினும் தொடந்து புத்தாடை வாங்க மக்கள் வந்ததால் வியாபாரம் களை கட்டியது. தீபாவளி நேற்று காலை ஆரம்பமான நிலையிலும், சாலையோர கடைகளில் வியாபாரம் களைகட்டியது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: கடை, நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், போனஸ் பெறும் நாளில் துணி வாங்கி செல்வர். இதேபோல் சீசன் கடைகளில் பணியாற்றுபவர், தினக்கூலி தொழிலாளிகள் தீபாவளி அன்று காலை வரை வேலை செய்வார்கள். பின் சம்பளம் பெற்றுக்கொண்டு துணி வாங்குவார்கள். அவர்களை குறிவைத்தே தீபாவளி நாளில் ஜவுளி விற்பனை செய்கிறோம். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us