/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தடப்பள்ளி-அ.கோட்டை 2ம் போக பாசனங்களுக்கு
/
தடப்பள்ளி-அ.கோட்டை 2ம் போக பாசனங்களுக்கு
ADDED : டிச 11, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்று நீர் திறப்பு
கோபி, டிச. 11-
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
கடந்த ஜூலை, 12 முதல் நவ.,8ம் தேதி வரை, முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் போக பாசனத்துக்கு இன்று முதல், 2025 ஏப்.,9ம் தேதி வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க, அரசு கூடுதல் தலைமை செயலர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

