sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மயானம் சென்ற இறந்தவர் உடல்: போலீசார் கைப்பற்றி நடவடிக்கை

/

மயானம் சென்ற இறந்தவர் உடல்: போலீசார் கைப்பற்றி நடவடிக்கை

மயானம் சென்ற இறந்தவர் உடல்: போலீசார் கைப்பற்றி நடவடிக்கை

மயானம் சென்ற இறந்தவர் உடல்: போலீசார் கைப்பற்றி நடவடிக்கை


ADDED : மே 09, 2024 06:23 AM

Google News

ADDED : மே 09, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோட்டில், மயானத்துக்கு சென்ற இறந்தவர் உடலை, போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

ஈரோடு, சூரம்பட்டி பாரதிபுரத்தை சேர்ந்தவர் துரைசாமி, 42, பெயின்டர். திருமணமாகவில்லை. இவரது தந்தை ஆறுமுகம் கடந்த, 3ல் இறந்தார். துரைசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. தந்தை இறப்பால் மன உளைச்சல் ஏற்பட்டு அதிகளவில் மது குடித்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் பேச்சு மூச்சின்றி வீட்டில் கிடந்துள்ளார். உறவினர்கள், நண்பர்கள் மூலம் அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன் பின் அவரது உடல், வீட்டுக்கு கொண்டு வந்து இறுதி சடங்கு செய்த பின், அங்குள்ள மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது துரைசாமி முதுகில் ரத்தக்கறை இருந்ததாக கூறி, சந்தேகம் எழுப்பி சூரம்பட்டி போலீசாருக்கு அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் போன் மூலம் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று, துரைசாமி உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு வந்தனர். இறந்தவர் உடலை மயானம் வரை எடுத்து சென்ற பின், மீண்டும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே, இறப்புக்கான முழு காரணம் தெரிய வரும் என, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us