sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஊருக்குள் வராத பஸ் சிறைபிடிப்பு

/

ஊருக்குள் வராத பஸ் சிறைபிடிப்பு

ஊருக்குள் வராத பஸ் சிறைபிடிப்பு

ஊருக்குள் வராத பஸ் சிறைபிடிப்பு


ADDED : செப் 25, 2024 01:28 AM

Google News

ADDED : செப் 25, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊருக்குள் வராத

பஸ் சிறைபிடிப்பு

ஈரோடு, செப். 25-

சிவகிரியை அடுத்த கந்தசாமிபாளையம், தாண்டாம்பாளையம் பகுதிக்கு ஈரோடு-வெள்ளகோவில், மூலனுார் செல்லும் தனியார் பஸ்கள், அரசு பஸ்கள் வந்து செல்லும் வகையில் வழித்தடம் உள்ளது. ஆனால் பல மாதங்களாக தனியார் பஸ்கள் வராமல், நெடுஞ்சாலை வழியே செல்வதால், இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

கொல்லன்கோவில் பேரூராட்சி நான்காவது வார்டு கவுன்சிலர் ரேவதி தலைமையிலான மக்கள், அமைச்சர் முத்துசாமியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மோளபாளையம் வந்த எல்.கே.எம்., தனியார் பஸ்சை மக்கள் சிறைபிடித்தனர். கந்தசாமிபாளையம், தாண்டாம்பாளையத்துக்கு வராதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். சிவகிரி போலீசார் மக்களை சமாதானம் செய்தனர். அனுமதி பெற்ற வழித்தடத்தில் பஸ்சை இயக்க அறிவுறுத்தினர். இதனால் பஸ் சிறைபிடிப்பு, 20 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.






      Dinamalar
      Follow us