sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்டத்தில் சரிந்து வரும் நெல் சாகுபடி பரப்பு கடந்த ஆண்டு 15 ஆயிரம் ஏக்கர் குறைந்தது

/

மாவட்டத்தில் சரிந்து வரும் நெல் சாகுபடி பரப்பு கடந்த ஆண்டு 15 ஆயிரம் ஏக்கர் குறைந்தது

மாவட்டத்தில் சரிந்து வரும் நெல் சாகுபடி பரப்பு கடந்த ஆண்டு 15 ஆயிரம் ஏக்கர் குறைந்தது

மாவட்டத்தில் சரிந்து வரும் நெல் சாகுபடி பரப்பு கடந்த ஆண்டு 15 ஆயிரம் ஏக்கர் குறைந்தது


ADDED : அக் 28, 2024 03:45 AM

Google News

ADDED : அக் 28, 2024 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில், 15 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதாக, வேளாண் துறை அதிகா-ரிகள் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு கீழ்பவானி, கொடிவேரி, காலிங்கராயன் பாசன வாய்க்கால்களில் பாசனம் நடக்கிறது.நெல், மஞ்சள், கரும்பு, வாழை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்-டாலும் புன்செய், நன்செய் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்-ணீரைக் கொண்டு அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படு-கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் அதிகரித்து வந்த நெல் சாகுபடி பரப்பு கடந்த மூன்றாண்டுகளாக குறைந்து வருகிறது. விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவது, போதிய விலை கிடைக்காததால், விவசாயத்தை விட்டு விவசா-யிகள் வெளியேறுதல் போன்ற காரணங்களால், நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருவது வேளாண்துறை புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.

இதுகுறித்து வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கீழ்ப-வானி, கொடிவேரி, காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதி-களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நன்செய், புன்செய் உள்ளிட்ட மூன்று சீசன்களிலும் ஒவ்வொரு சீசனுக்கும் தேவைக்கேற்ப சராசரியாக 30 முதல் 35 நெல் கொள்-முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இவை தவிர, தனியார் நெல் கொள்முதல் செய்பவர்களிடமும், விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இருப்பினும் பெரும்பகுதி அரசு கொள்-முதல் மையங்கள் மூலமாக அரசு நிர்ணயித்த விலைக்கு வாங்கப்-படுகிறது.

மாவட்டத்தில் கடந்த, 2021------------22ல், 76,223 ஏக்கரிலும், 2022--23, 75,608 ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதில், 10,000 ஏக்கரில் நெல் சாகுபடி குறைந்திருக்கிறது. நடப்பாண்-டான, 2023--24ல் மேலும், 15 ஆயிரம் ஏக்கர் குறைந்து, 60,198 ஏக்கர் மட்டுமே நெல் சாகுபடியாகி உள்ளது.

அதே நேரத்தில், 2021--22ல் அரசு நெல் கொள்முதல் மையங்-களில், 96,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் ஆனது. 2022--23ல், 71,000 மெட்ரிக் டன் கொள்முதலாகியுள்ளது. குறிப்-பாக, 2023--24ல், ஈரோடு மாவட்டத்தில் மட்டும், 15,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் குறைந்துள்ளது. இவ்வாறு அதி-காரிகள் கூறினர். நடப்பாண்டு, 2024--25ல், மேலும் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: திருச்சி, தஞ்சை, திரு-வாரூர், நாகை, புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்க-ளுக்கு அடுத்தபடியாக, அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்-வது ஈரோடு மாவட்டத்தில் தான். கடந்த இரண்டு ஆண்டாக, மேட்டூர் வலது கரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால், மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.

அதுமட்டுமின்றி, அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள், மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். விவசாய குடும்பத்தி-லேயே அடுத்த தலைமுறை விவசாயிகள் குறைந்து போவது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us