/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நடப்பாண்டு மாவட்டத்தில் 714.14 மி.மீ., மழை பதிவு
/
நடப்பாண்டு மாவட்டத்தில் 714.14 மி.மீ., மழை பதிவு
ADDED : டிச 27, 2024 01:02 AM
ஈரோடு, டிச. 27-
ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவான, 733.44 மி.மீட்டர் உள்ள நிலையில் கடந்த, 24 வரை, 714.14 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இதுபற்றி, ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி, செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு, 733.44 மி.மீட்டர். நடப்பாண்டு கடந்த, 24 வரை, 714.14 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. நடப்பாண்டில் வேளாண் விரிவாக்க மையங்களில் வினியோகம் செய்வதற்காக நெல் விதை, 14.1 டன், சிறுதானியங்கள், 8.4 டன், பயறு வகைகள், 21.8 டன், எண்ணெய் வித்துக்கள், 75.1 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
ரசாயன உரங்களான யூரியா, 6,215 டன், டி.ஏ.பி., 4,813 டன், பொட்டாஷ், 3,381 டன், காம்ப்ளக்ஸ், 9,336 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நடப்பு பருவத்துக்கு தேவையான அளவு இடுபொருட்கள் இருப்பில் உள்ளன. விவசாயிகளின் தேவைக்காக இடுபொருட்கள், அந்தந்த பகுதியில் உள்ள வட்டார, துணை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு தேவையான அளவு பூச்சி மருந்துகள், ரசாயன உரங்களும் போதுமான அளவு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு, வினியோகிக்கப்படுகிறது. பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் எண் விபரங்களை சரி பார்த்து உறுதி செய்தால் மட்டுமே, இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி தொடர்ந்து பெற முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, இத்திட்டத்தில் நிதியுதவி பெறும் விவசாயிகள், தங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

