/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மனைவி பிரிந்ததால் டிரைவர் விபரீத முடிவு
/
மனைவி பிரிந்ததால் டிரைவர் விபரீத முடிவு
ADDED : ஆக 14, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, பெரியவலசு, ராதாகிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் மணி-கரன், 27, ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் மனைவி தமிழ்மணி, 22; தம்பதிக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளன. மணிகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.
இதனால் ஏற்பட்ட தகராறில் சில நாட்களுக்கு முன், வீரப்பன்சத்-திரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு தமிழ்மணி சென்று விட்டார். மொபைலில் அழைத்தும் அவர் வராததால், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.