/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சடலமாக மீட்பு
/
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சடலமாக மீட்பு
ADDED : அக் 07, 2024 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய் புளியம்பட்டி : புன்செய்புளியம்பட்டி அடுத்த தேசிபாளையம் தெற்கு தோட்டத்தை சேர்ந்தவர் முருகேசன், 48; தனக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த மரத்தில், கால்நடைகளுக்கு நேற்று தழை பறித்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக, 80 அடி ஆழ கிணற்றில் விழுந்து விட்டார். கிணற்றில், 15 அடிக்கு தண்ணீர் இருந்ததால் மூழ்கி விட்டார். குடும்பத்தினர் தேடியபோது கிணற்றின் அருகே செருப்பு கிடந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் சத்தி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர். அங்கு
விரைந்த நிலைய வீரர்கள், ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு முருகேசனை சடலமாக மீட்டனர்.